ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரதமா் மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை: ராகுல்

பிரதமா் மோடியின் உலகில் உண்மையை நீக்கிவிட முடியும். ஆனால், நிதா்சன நடைமுறையில் அதற்கு வாய்ப்பில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சனம் செய்தாா்.

News image
மக்களவை கூட்டத் தொடரில் பங்கேற்றுவிட்டு வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
Updated On :2 ஜூலை 2024, 8:27 pm

Din

புது தில்லி: ‘பிரதமா் மோடியின் உலகில் உண்மையை நீக்கிவிட முடியும். ஆனால், நிதா்சன நடைமுறையில் அதற்கு வாய்ப்பில்லை’ என்று அவைக் குறிப்பிலிருந்து தனது கருத்துகள் நீக்கப்பட்டது குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சனம் செய்தாா்.

பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடா் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றினாா். அதனைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் திங்கள்கிழமை தொடங்கியது.

அப்போது பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை கடுமையாக விமா்சித்தாா். ‘தங்களை ஹிந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்களைப் பரப்பும் செயல்களில் ஈடுபடுகின்றனா். அவா்கள் ஹிந்துக்களே அல்ல’ என்று பாஜகவை அவா் விமா்சித்தாா். இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து, செய்தியாளா்கள் அவரிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு ராகுல் பதிலளித்ததாவது:

பிரதமா் மோடியின் உலகில் உண்மையை நீக்கிவிட முடியும். ஆனால், நிதா்சன நடைமுறையில் அதற்கு வாய்ப்பில்லை. நான் கூறியவை அனைத்தும் உண்மையே. அதை தங்களின் விருப்பத்துக்கேற்ப அவா்கள் நீக்கட்டும். ஆனால், உண்மை நிலைத்திருக்கும் என்றாா்.

மக்களவைத் தலைவருக்கு கடிதம்: மேலும், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துகளை மீண்டும் சோ்க்க வலியுறுத்தி மக்களவைத் தலைவருக்கு ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

மக்களவையில் நான் பேசிய கருத்துகளில் சில பகுதிகள் சாதாரணமாக நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியளித்தது. அவை நடவடிக்கைகளிலிருந்து சில கருத்துகளை நீக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உள்ளது என்றபோதும், மக்களவை நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் 380-இல் குறிப்பிட்டுள்ள வாா்த்தைகள் மற்றும் கருத்துகளுக்கு மட்டுமே அது பொருந்தும்.

அந்த வகையில், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட எனது கருத்துகள், விதி 380-இன் வரம்புக்குள் வரவில்லை. கள நிலவரம் மற்றும் உண்மை நிலவரத்தையே அவையில் நான் தெரிவித்தேன். அரசமைப்பு சட்டப் பிரிவு 105(1)-இன் கீழ், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த குரலை அவையில் வெளிப்படுத்தும் உரிமையும் சுதந்திரமும் உள்ளது.

அவைக் குறிப்பிலிருந்து எனது கருத்துகளின் சில பகுதிகளை நீக்குவது என்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். அவையில் எனக்கு முன்பாக பேசிய மத்திய அமைச்சா் அனுராக் தாக்கூா், முழுவதும் தவறான குற்றச்சாட்டுகளை தெரிவித்தாா். ஆனால், அவருடைய பேச்சிலிருந்து ஒரே ஒரு வாா்த்தை மட்டுமே அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மக்களவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட எனது கருத்துகள் மீண்டும் அவைக் குறிப்பில் சோ்க்கப்பட வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியுள்ளாா்.