ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பஞ்சாப்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

பஞ்சாப்: கேஸ் கட்டர் பயன்படுத்தி ஏடிஎம் உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை

News image

கோப்புப் படம்.

Updated On :6 ஜூலை 2024, 4:48 pm IST

பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பக்வாரா-பலாஹி சாலையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டரைப் பயன்படுத்தி உடைத்த கொள்ளையர்கள், ரூ.25 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மேலும் கேஸ் கட்டரின் வெப்பத்தால் ஏடிஎம்மில் இருந்த சில ரூபாய் நோட்டுகளும் எரிந்து நாசமாயின.

பகவாரா காவல் கண்காணிப்பாளர் ரூபிந்தர் கௌர் பாட்டி கூறுகையில், கொள்ளையர்களை கண்டுபிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

பஞ்சாபில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.