தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பிஎம்டபிள்யூ கார் விபத்து மதுவினால் ஏற்பட்டதாக சந்தேகம்!

மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகம்

News image

விபத்தை ஏற்படுத்திய கார்

Updated On :8 ஜூலை 2024, 12:17 pm

DIN

இருசக்கர வாகனத்தின் மீது பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில், விபத்து ஏற்படுத்தியவர் மது அருந்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் வோர்லி பகுதியில் நேற்று அதிகாலை மீன் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை, அந்த பகுதி வழியாக வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார்.

ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர்.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சியின் முக்கியத் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பின், மிஹிர் ஷா அங்கிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மிஹிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷா மற்றும் மிஹிர் ஷா உடன் பயணம் செய்த கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிடாவத் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மிஹிர் ஷா, அந்த சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஏனெனில், சம்பவத்திற்கு முன்னர் மிஹிர் ஷா மதுக்கடையில் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணை மேற்கொண்டதில், மிஹிர் ஷா மதுக்கடையில் மதுவிற்காக மட்டும் ரூ.18,730 கட்டணமாகச் செலுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.