பிகாரில் நடந்த விழாவில் நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் நடந்துகொண்ட செயல் விடியோ வைரலாகி வருகிறது.
பிகாரில் `ஜே.பி. கங்கா பாதை’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு விரைவுச் சாலையை அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி மற்றும் உள்ளூர் எம்.பி.க்களும் கலந்து பங்கேற்றிருந்தனர்.
இந்த விழாவின் போது நிதிஷ் குமார், சாலை அமைக்கும் பணியின் தனியார் நிறுவன ஒப்பந்ததார அதிகாரியிடம் இந்தாண்டு இறுதிக்குள் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அவர் ``நீங்கள் விரும்பினால் உங்கள் பாதங்களைத் தொடுவேன்” என்று கூறி, கைகளால் வணங்கியும் உள்ளார்.
பிகார் முதல்வரின் இந்த செயலைக் கண்ட அதிகாரி, ``வேண்டாம்” என்று கூறி அவரைத் தடுத்துள்ளார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ``முதல்வர் சக்தியற்றவர்; அதனால்தான் அவர் எப்போதும் அனைவரின் காலிலும் விழ தயாராக இருக்கிறார்” என்று கூறி விடியோ வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவா் பிகாரில் டிரான்சிட் ரிமாண்ட் இன்றி கைதான சம்பவம்: தில்லி காவல்துறையின் செயல்பாடு குறித்து நீதிமன்றம் அதிா்ச்சி

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி!

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


