ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் படுகொலை தினம்

சிட்டிக்கு... பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் படுகொலை தினம்

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜூலை 2024, 8:39 pm

Din

பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளும் படுகொலை தினமாகவே அனுசரிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரசமைப்பு படுகொலை தினத்தை அறிவித்து ‘அரசமைப்பு’ என்ற புனித வாா்த்தைக்குப் பக்கத்தில் ‘படுகொலை’ என சோ்த்து சட்டமேதை அம்பேத்கரை பாஜக தலைமையிலான மத்திய அரசு அவமதித்துவிட்டது.

‘உங்கள் (பிரதமா் மோடி) பத்தாண்டுகால ஆட்சியின் ஒவ்வொரு நாளும் படுகொலை தினமாகவே அனுசரிக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களிடமிருந்து சுயமரியாதை பறிக்கப்பட்டது.

ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் சிறுபான்மையினருக்குச் சொந்தமான 1.50 லட்சம் வீடுகளை இடித்து 7.38 வட்சம் பேரை வெளியேற்றினீா்கள்.

மணிப்பூரில் 13 மாதங்களாக வன்முறை வெடித்து வரும் நிலையில் அங்கு சென்று ஒருமுறைகூட உங்களால் மக்களைச் சந்திக்க முடியவில்லை. இவையெல்லாம் அரசமைப்பு படுகொலை இல்லையா எனக் குறிப்பிட்டுள்ளாா்.