ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஷ்ரேயா கோஷல் பாடலின் பின்னணியில்.. உணர்ச்சிவயப்பட்ட மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்!

ஷ்ரேயா கோஷல் பாடலின் பின்னணியில் திருமண மண்டபத்துக்குள் நுழைந்த மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் உணர்ச்சிவயப்பட்டார்.

News image
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஆன்டிலியா இல்லம். - ANI
Updated On :13 ஜூலை 2024, 7:08 am

DIN

முகேஷ் அம்பானி மகன் ஆனாந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண வைபவம் மும்பையில் நேற்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது. ஷ்ரேயா கோஷலின் பாடல் பின்னணியில், மணமகள் ராதிகா மெர்ச்சன்ட் மண்டபத்துக்குள் நுழையும்போது உணர்ச்சிவயப்பட்டார்.

வெள்ளிக்கிழமை, மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற விழாவில், மணமகன் ஆனந்த், தனது பெற்றோரின் கையைப் பிடித்துக்கொண்டு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தார். மணமகனுடன் அவரது சகோதரர் மற்றும் சகோதரி மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணையுடன் வந்தனர்.

Story image

அப்போது, ராதிகா மெர்ச்சன்ட் தனது தந்தை விரென் மெர்ச்சண்ட் கையைப் பிடித்துக்கொண்டு திருமண மண்டபத்துக்கு வருகிறார். அவரது வருகையை, மண்டபம் முழுக்க நிறைந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்க, அந்த தருணத்தில் அவர் உணர்ச்சிவயப்பட்டுக் காணப்படுகிறார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு அரசியல் தலைவர்களும், நடிகர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். ஒரு சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய திருமண வைபவம், ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு விழா நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.