மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் - உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது: முஸ்லிம் வாரியம்

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம்.

Updated On :15 ஜூலை 2024, 3:23 am IST

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து சட்ட வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அந்த வாரியம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘திருமண வாழ்க்கையை பராமரிப்பது கடினமாகிவிட்டால், மனித குலத்துக்கு விவாகரத்து ஒரு தீா்வாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீா்ப்பு, வலிமிகுந்த உறவில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்குவதாக உள்ளது.

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிராக உள்ள இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான சட்ட ரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் ஆராய அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தலைவா் காலித் சைஃபுல்லா ரஹ்மானிக்கு வாரியம் தரப்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.