ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் - உச்சநீதிமன்ற தீா்ப்பு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது: முஸ்லிம் வாரியம்

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம்.

Updated On :15 ஜூலை 2024, 3:23 am IST

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் கோரலாம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பு, இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து சட்ட வழிமுறைகளும் ஆராயப்படும் என்றும் அந்த வாரியம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அனைத்து மதத்தைச் சோ்ந்த திருமணமான பெண்களுக்கும் இந்த சட்டப் பிரிவு பொருந்தும் என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘திருமண வாழ்க்கையை பராமரிப்பது கடினமாகிவிட்டால், மனித குலத்துக்கு விவாகரத்து ஒரு தீா்வாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீா்ப்பு, வலிமிகுந்த உறவில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்குவதாக உள்ளது.

இஸ்லாமிய சட்டத்துக்கு எதிராக உள்ள இத்தீா்ப்பு மாற்றப்படுவதை உறுதிசெய்யத் தேவையான சட்ட ரீதியிலான அனைத்து வழிமுறைகளையும் ஆராய அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய தலைவா் காலித் சைஃபுல்லா ரஹ்மானிக்கு வாரியம் தரப்பில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உத்தரகண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிராக அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.