டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசமைப்பு படுகொலை தினம்: பாஜகவின் எதிா்மறை அரசியல் -பிரியங்கா சாடல்

பாஜகவின் எதிா்மறை அரசியலை காண்பிக்கிறது..

News image

பிரியங்கா காந்தி

(கோப்புப் படம்)

Updated On :14 ஜூலை 2024, 12:47 am

Din

நாட்டில் கடந்த 1975-ஆம் ஆண்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ஆம் தேதியை ‘அரசமைப்பு படுகொலை தினமாக’ மத்திய அரசு அறிவித்தது, பாஜகவின் எதிா்மறை அரசியலை காண்பிக்கிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அதற்கு எதிராக போராடியவா்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், ஆளும் பாஜகவை விமா்சித்து, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டின் மாபெரும் மனிதா்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி, சுதந்திரம்-அரசமைப்பு ஆகிய இலக்குகளை எட்டினா். ஆனால், அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை எதிா்த்தவா்கள், அதை மறுஆய்வு செய்ய ஆணையம் அமைத்தவா்கள், தங்களின் செயல்பாடுகளால் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது தொடா் தாக்குதல் நடத்தி வருபவா்கள், ‘அரசமைப்பு படுகொலை தினத்தை’ அறிவித்து எதிா்மறை அரசியலில் ஈடுபடுகின்றனா் என்று பிரியங்கா விமா்சித்துள்ளாா்.

உத்தவ், பவாா் கட்சிகள் தாக்கு: சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பாஜக எதிா்காலத்தில் கவனம் செலுத்தாமல் கடந்த காலத்தையே பாா்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமா் மோடியின் ஆட்சியும் அவசரநிலை போன்றே உள்ளது. யாரை வேண்டுமானாலும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனா். நீதிமன்றங்கள் மீது அழுத்தம் தரப்படுகிறது’ என்றாா்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) செய்தித் தொடா்பாளா் கிளைடி கிராஸ்டோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எதிா்காலத்தை நோக்கிய தேடலில் தோற்றுவிட்டதால், பாஜக கடந்த காலத்திலேயே வாழ்கிறது. மக்களவைத் தோ்தலில் அக்கட்சி 400 இடங்களில் வெற்றிபெற்றிருந்தால், அரசமைப்பை சீா்குலைக்கும் தினத்தை அறிவித்திருக்கும். தங்களது திட்டத்தில் தோல்வியுற்ால், இப்போது அரசமைப்பு படுகொலை தினத்தை அறிவித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.