பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளர்: மீட்க முடியாத நிலை!

கேரளத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணி 24 மணி நேரமாகியும் நீடித்து வருகிறது.

News image
கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் மற்றும் காவல் துறை- ஏ.என்.ஐ.
Updated On :14 ஜூலை 2024, 3:59 pm

DIN

கேரளத்தில் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய தூய்மைப் பணியாளரை மீட்கும் பணி 24 மணி நேரமாகியும் நீடித்து வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர் ஜோய். 42 வயதான இவர், மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தம்பானூர் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேங்கி இருந்த கழிவுகளுக்கு மத்தியில் சிக்கினார்.

அவருடன் பணிபுரிந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று (ஜூலை 13) இரவு வரை பல்வேறு மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் இறங்கியும் தூய்மைப் பணியாளரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.

இதனிடையே இன்று காலையும் அவரைத் தேடும் பணியில் அதிகாரிகள் மும்முரம் காட்டினர். மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் உத்தரவின்பேரில், ஸ்கூபா டைவிங் செய்பவர்களை அனுப்பி தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

எனினும் கால்வாயில் அதிக அடர்த்தியாக கழிவுகள் தேங்கியிருப்பதால், அவர்களால் அப்பணியை செய்து முடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியி நடைபெற்று வருகிறது. இதன் பிறகு தூய்மைப் பணியாளரைத் தேடுவதற்காக படையிலர் உள்ளே அனுப்பப்படவுள்ளனர்.

தூய்மைப் பணியாளர் கால்வாயில் சிக்கி 24 மணிநேரம் கடந்தும், அவரை மீட்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. மீட்புப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.