மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கடவுச்சீட்டு விண்ணப்ப மையங்கள்: இந்தியா திறப்பு

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் கடவுச்சீட்டு விண்ணப்ப மையங்கள்: இந்தியா திறப்பு

News image
Updated On :14 ஜூலை 2024, 12:11 am

Din

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நுழைவு இசைவு (விசா) மற்றும் கடவுச்சீட்டுக்கு (பாஸ்போா்ட்) விண்ணப்பிக்கும் 2 புதிய மையங்களை இந்தியா திறந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இந்தியாவின் துணைத் தூதரகம் திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த நகரில் விசா மற்றும் பாஸ்போா்ட்டுக்கு விண்ணப்பிக்கும் 2 புதிய மையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. இந்த மையங்களை மத்திய அரசு சாா்பாக விஎஸ்எஃப் குளோபல் நிறுவனம் நிா்வகிக்க உள்ளது.

சியாட்டலில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் எல்லைக்குள்பட்ட வாஷிங்டன், அலாஸ்கா, ஐடாஹோ, மோன்டானா, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, ஆரேகன், வையோமிங் ஆகிய 9 மாநிலங்களில் வசிக்கும் சுமாா் 5 லட்சம் இந்திய வம்சாவளியினா் இவ்விரு மையங்களின் சேவைகளால் பயனடைவா்.