சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மும்பை: ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 14 நாள்களில்..

மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூலை 2024, 8:08 pm IST

மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே பருவமழை தற்போது தெற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி திரும்பியுள்ளதால், தெற்கு மகாராஷ்டிரம், கோவா மற்றும் கேரள மாநிலத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை மதம் முழுக்க மும்பை பெறும் மழை அளவை விட, கடந்த 14 நாள்களில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது.

ஜூலை மாதத்தில் சராசரியாக 855.7 மி.மீ மழை மும்பையில் பதிவாகும். ஆனால் தற்போது வரையே மும்பையில் 862 மி.மீ. மழை பெய்துள்ளது.

மேலும், இம்மாதத்தில் மேலும் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், 1000 மி.மீ. அளவை விடக் கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையின் சாண்டாகுரூஸ் நிலையத்தில் 1,208 மி.மீ மழை பெய்துள்ளது. இதனிடையே மும்பை மாவட்டத்துக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.