தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

மும்பை: மழையால் இருவர் பலி; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - காங்கிரஸ்

மும்பையில் மழையால் கடந்த 4 நாள்களில் இருவர் பலியான சம்பவம் பற்றி...

News image

காங்கிரஸ் கொடியுடன் தொண்டர்கள் - கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2026, 1:17 pm IST

மும்பையில் மழையால் கடந்த 4 நாள்களில் இருவர் பலியாகினர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அமின் படேல் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) தெரிவித்தார்.

மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) மழை பெய்து கொண்டிருந்த போது, சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனம் மீது ஒரு மரம் திடீரென முறிந்து விழுந்ததில் 11வயதுடைய பள்ளி மாணவர் ஒருவர் பலியானார்.

இதையடுத்து, மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதியான சாந்திவலி பகுதியில் நேற்று (ஜூலை 2) பெய்த கனமழையின் போது, ​​திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்ததில் அஸ்லாம் இஷாக் ஷேக் (55) என்ற நபர் பலியானார்.

இதுகுறித்து அமின் படேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இது 101 சதவிகிதம் நிர்வாகத்தின் தவறுதான். மும்பையைப் பொறுத்தவரை, இது மிகவும் தீவிரமான ஒரு குறைபாடு. மும்பை மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வீணாகிவிட்டது. இதில் 11 வயது சிறுவன், ஒரு முதியவர் என இரண்டு பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு இன்றே அறிவிக்க வேண்டும்.

மகாராஷ்டிர அரசு, பெருநகர மும்பை மாநகராட்சி, நவி மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை பெருநகர நிர்வாகம் என அனைத்தும் இதில் தோல்வியடைந்துவிட்டன. மழைக்காலம் தொடங்கி எட்டு நாள்களே ஆகியுள்ள நிலையில், பருவமழைக்கு இன்னும் நான்கு மாதங்கள் மீதம் உள்ளன. எனவே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமின் படேல் குறிப்பிட்டார்.

Summary

Two people have died due to rain in Mumbai over the past four days. Consequently, Congress leader Amin Patel stated on Friday (July 3) that the government must intensify precautionary measures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.