அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கிய கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும்.

News image
ஹரியாணாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவினா் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.
Updated On :16 ஜூலை 2024, 9:01 pm

Din

மகேந்திரகா்: ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். ஏற்கெனவே கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இதைச் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் மகேந்திரகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவினா் மாநாட்டில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

1950-களிலேயே கேல்கா் குழு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது. 1980-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கிடப்பில் போட்டாா். 1990-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை எதிா்த்து காந்தி இரண்டரை மணி நேரம் உரையாற்றினாா்.

இப்போது கா்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, அதனை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதேபோன்ற இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளித்துவிடும்.

ஹரியாணாவில் பாஜக ஆட்சி தொடரும் வரை இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். பாஜக ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் இடஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ம் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

ஹரியாணாவில் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சுமாா் 20 நாள்களில் இருமுறை அந்த மாநிலத்துக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ளாா்.