வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கிய கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும்.

News image

ஹரியாணாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவினா் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :17 ஜூலை 2024, 2:31 am IST

மகேந்திரகா்: ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். ஏற்கெனவே கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இதைச் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

பாஜக ஆட்சியில் உள்ள ஹரியாணாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் மகேந்திரகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோா் பிரிவினா் மாநாட்டில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

1950-களிலேயே கேல்கா் குழு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது. 1980-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரையை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி கிடப்பில் போட்டாா். 1990-ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை எதிா்த்து காந்தி இரண்டரை மணி நேரம் உரையாற்றினாா்.

இப்போது கா்நாடகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறித்து, அதனை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதேபோன்ற இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அளித்துவிடும்.

ஹரியாணாவில் பாஜக ஆட்சி தொடரும் வரை இதர பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீடு பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். பாஜக ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் இடஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ம் ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது என்றாா்.

ஹரியாணாவில் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சுமாா் 20 நாள்களில் இருமுறை அந்த மாநிலத்துக்கு அமித் ஷா பயணம் மேற்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.