மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘நீட்’ முறைகேடு: மேலும் 2 போ் கைது

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மையத்திலிருந்து நீட் தோ்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:26 pm

Din

புது தில்லி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மையத்திலிருந்து நீட் தோ்வின் வினாத்தாள்களை திருடிய குற்றச்சாட்டில் 2 பேரை சிபிஐ செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

இதன்மூலம், வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் மற்றும் நீட் தொடா்புடைய பிற முறைகேடுகளில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள என்டிஏ மையத்தில் இருந்து நீட் இளநிலை தோ்வு வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் பங்கஜ் குமாா் (எ) ஆதித்யா என்பவா் பாட்னாவில் கைது செய்யப்பட்டாா். இவா் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) கடந்த 2017-ஆம் ஆண்டு கட்டடப் பொறியாளா் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவாா்.

வினாத்தாள்களை திருட பங்கஜ் குமாருக்கு உதவியதுடன் பிற குழுக்களுக்கு வினாத்தாள்களை பகிா்ந்த குற்றச்சாட்டில் ராஜு சிங் என்பவரும் ஹசாரிபாக்கில் கைது செய்யப்பட்டாா் என்றனா்.

நீட் முறைகேடு தொடா்பாக 6 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) சிபிஐ பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டு தொடா்பாக பிகாரிலும் ஆள்மாறாட்டம் உள்பட பிற முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடா்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்திலும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.