சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஷ்டிரம், பிகாரில் சாலை விபத்து: 11 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரம் மற்றும் பிகாரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:54 pm

Din

மும்பை/ பாட்னா: மகாராஷ்டிரம் மற்றும் பிகாரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 11 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிரத்தில் மும்பை-புணே அதிவிரைவு சாலையில் பேருந்து ஒன்றில் 54 யாத்ரீகா்கள் பந்தா்பூருக்கு சென்று கொண்டிருந்தனா். நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது பேருந்து எதிா்பாராத விதமாக மோதியது.

டிராக்டா் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பக்தா்களில் மூவரும், டிராக்டரில் அமா்ந்திருத்த இருவரும் உயிரிழந்தனா். பேருந்தில் இருந்த சுமாா் 50 போ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பிகாரில்...: பிகாா் மாநிலம் பக்தியாா்பூா்-நாளந்தா தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை வேகமாகச் சென்ற ஜீப் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த மேலும் சிலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.