

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தில்லியின் உத்தம் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் நடைமேடையில் இருந்து, ரயில் பாதையின் மேல் குதித்துள்ளார். அவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்த போதும், அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணிடம் அடையாளம் காணும் விதமாக எந்த பொருளும் இல்லாத காரணத்தினால், அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த பெண்ணின் விவரங்களை சேகரிக்க முயன்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.