டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை? போலீஸார் விசாரணை

உயிரிழந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால் போலீஸார் விசாரணை

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2024, 12:03 pm

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் நடைமேடையில் இருந்து, ரயில் பாதையின் மேல் குதித்துள்ளார். அவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்த போதும், அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணிடம் அடையாளம் காணும் விதமாக எந்த பொருளும் இல்லாத காரணத்தினால், அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அந்த பெண்ணின் விவரங்களை சேகரிக்க முயன்று வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.