பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சரியாகப் பொருத்தப்படாத ரயில் தண்டவாளங்கள்: கோண்டா ரயில் விபத்து விசாரணை அறிக்கை

சரியாகப் பொருத்தப்படாத ரயில் தண்டவாளங்களால் விபத்து நேரிட்டதாக கோண்டா ரயில் விபத்து விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - -

Published On :

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா் - திப்ரூகா் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில், தண்டவாளங்கள் சரியாகப் பொருத்தப்படாததே காரணம் என்று, விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ரயில்வே மறுப்புத் தெரிவித்துள்ளது.

மிக அவசரமாக கொடுக்கப்படும் அறிக்கை என்று ரயில்வே தெரிவிக்க, விசாரணைக் குழுவில் இருக்கும் உறுப்பினரும், குழுவின் அறிக்கையை ஏற்கவில்லை.

கோண்டா ரயில் விபத்தில் 4 பேர் பலியாகினர். காயமடைந்த 31 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா தெரிவித்திருந்தார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே தரப்பில் உயா்நிலை விசாரணை தொடங்கப்பட்டது. ரயில்வேயின் தொழில்நுட்பக் குழுவினா் ம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா்.

ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், ரயில் தண்டவாளங்களைப் பொருத்தும் பணியானது சரியாக இல்லை, இதன் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று ஹிந்தியில் அளிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், விசாரணையின் துவக்கத்தில் அடிப்படையில்லாமல் கூறும் எந்த தகவலும் சரியால்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த விசாரணையானது, அனைத்து அடிப்படைக் காரணிகளையும் ஆராய்ந்து, தொழில்நுட்ப மற்றும் விபத்தின் முழு விவரங்களையும் விசாரிக்கும். மிக முக்கிய விஷயங்கள் எதுவும் கூட்டு விசாரணைக் குழுவினரின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விசாரணை மிகவும் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது எனறும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் - திப்ரூகா் (அசாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன.

விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கவிழ்ந்த பெட்டிகளை கனரக இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மறுநிா்மாணப் பணியில் சுமாா் 800 ஊழியா்கள் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படுமென என ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.