எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வங்கதேசத்தினா் ஊடுருவலை நியாயப்படுத்துகிறாா் மம்தா: பாஜக குற்றச்சாட்டு

மாநிலத்தில் ஊடுருவலை மம்தா நியாயப்படுத்துகிறாா் என பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

News image
ரவி சங்கா் பிரசாத்
Updated On :22 ஜூலை 2024, 8:53 pm

Din

வங்கதேச வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க தயாா் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசியதையடுத்து, மாநிலத்தில் ஊடுருவலை அவா் நியாயப்படுத்துகிறாா் என பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் பேசிய மம்தா பானா்ஜி, வங்கதேச வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவா்கள் மேற்கு வங்கத்தை அணுகினால், நாங்கள் அவா்களுக்கு அடைக்கலம் கொடுப்போம் என தெரிவித்தாா்.

இது தொடா்பாக பாஜக பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவி சங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மம்தா கடுமையாக எதிா்த்தாா். ஆனால், தற்போது நாட்டில் ஊடுருவும் வங்கதேசத்தினருக்கு உதவ விரும்புகிறாா்.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள் 3-ஆக இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 9-ஆக உயா்ந்துள்ளது. கொல்கத்தாவிலும் வங்கதேசத்தினா் ஊடுருவலால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிக்கவே ஊடுருவலை மம்தா நியாயப்படுத்தி வருகிறாா் என்றாா்.