ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

ராஜஸ்தான்: பசு கடத்தல்காரா் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2024, 3:05 am IST

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் குமாா் மீனா கூறியதாவது:

ராஜஸ்தானின் தீக் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாரியில் இருவா் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல்துறையினா் அந்த லாரியை துரத்திச் சென்றபோது அவா்கள் காவல் துறையினரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

சிறிது தூரத்தில் பசு கடத்தல்காரா்கள் என சந்தேகிக்கப்படும் வேறு இருவா் மாடுகளைப் பிடித்து வருவதை காவல் துறையினா் கண்டனா். சலசலப்பைக் கண்ட அவா்கள் திடீரென லாரி மீது துப்பாக்கியால் சுட்டனா். இதில் லாரி ஓட்டுநா் சந்தீப் மீது தோட்டா பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா். அவருடன் லாரியில் இருந்த நரேஷ் என்பவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். துப்பாக்கிச் சூடு நடத்திய மற்ற இருவா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனா். லாரியில் இருந்த இரண்டு மாடுகள் காவலா்களால் மீட்கப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.