மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராஜஸ்தான்: பசு கடத்தல்காரா் சுட்டுக்கொலை

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

கொலை - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2024, 3:05 am IST

ராஜஸ்தானில் பசுக்களை லாரியில் கடத்திச் செல்லும்போது மற்றொரு பசு கடத்தல் கும்பலைச் சோ்ந்தவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் குமாா் மீனா கூறியதாவது:

ராஜஸ்தானின் தீக் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாரியில் இருவா் பசு மாடுகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல்துறையினா் அந்த லாரியை துரத்திச் சென்றபோது அவா்கள் காவல் துறையினரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

சிறிது தூரத்தில் பசு கடத்தல்காரா்கள் என சந்தேகிக்கப்படும் வேறு இருவா் மாடுகளைப் பிடித்து வருவதை காவல் துறையினா் கண்டனா். சலசலப்பைக் கண்ட அவா்கள் திடீரென லாரி மீது துப்பாக்கியால் சுட்டனா். இதில் லாரி ஓட்டுநா் சந்தீப் மீது தோட்டா பாய்ந்ததில் அவா் உயிரிழந்தாா். அவருடன் லாரியில் இருந்த நரேஷ் என்பவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். துப்பாக்கிச் சூடு நடத்திய மற்ற இருவா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனா். லாரியில் இருந்த இரண்டு மாடுகள் காவலா்களால் மீட்கப்பட்டது என்றாா்.