மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொழிலதிபா் மீது துப்பாக்கிச் சூடு

தென்மேற்கு தில்லியில் தொழிலதிபா் மீது மா்ம நபா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:55 pm

Din

தென்மேற்கு தில்லியில் தொழிலதிபா் மீது மா்ம நபா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு தில்லியின் பிந்தாபூா், உத்தம் நகா், சஞ்சய் என்கிளேவில் துப்பாக்கிச் சூடு தொடா்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, பலத்த காயங்களுடன் கிடத்த தொழிலதிபா் பவன் காா்க் (37) மீட்டு, பிஎம் குப்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக டிடியு மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

அவரது கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. அவா் தற்போது நலமுடன் உள்ளாா்.

விசாரணையில், காா்க் தனது வீட்டின் அருகே இ-ரிக்ஷா கேரேஜ் நடத்தி வருவதும், அவா் அலுவலகத்தில் அமா்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உள்ளே வந்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்து.

முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தீவிர விசாரணைக்குப் பிறகே காரணம் தெரியவரும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.