ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இன்று (ஜூலை 25) நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஆட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமிருந்ததாக குற்றம் சாட்டினார்.
சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது, ``கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் போதைப்பொருள் தலைநகரமாக ஆந்திரப் பிரதேசம் மாறியுள்ளது. அதில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பங்கு இருக்கிறது. அவர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் உள்ளன, இதில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. ரகுராமா கிருஷ்ணா ராஜு அளித்த கொலை முயற்சி வழக்கும் அடங்கும்.
பப்லோ எஸ்கோபார் என்பவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்; அவர் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாகவும், தன்னை எதிர்க்கும் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் கொன்றதாகவும் கூறுகின்றனர்.
எஸ்கோபாரை `போதைப்பொருள் பயங்கரவாதி’ என்று அழைப்பர். போதைப்பொருள்களை விற்பனை செய்வதன் மூலமும் ஒருவர் பணக்காரராக முடியும் என்பதைக் காட்டினார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைமையின்கீழ் நடந்த ஆட்சியிலும் இதேபோன்ற நிலைமை உருவானது” என்று கூறினார்.
நேற்று தில்லி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திரத்தில் தற்போதைய ஆட்சியில் வன்முறைகள் அதிகம் நிலவிவருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் - புகைப்படங்கள்
இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும்தானா?

சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்: முதல்வர் விஜய் பங்கேற்பு
விடியோக்கள்

இறந்தும் வாழும் 5 ரூபாய் டாக்டர்! அவரது மகன் தொடரும் மக்கள் சேவை | Dr. Sarathraj | 5 Rupees doctor

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan





