ஆசியக் கோப்பை: அரையிறுதிப் போட்டிகள் முக்கியமானவை! -ஷஃபாலி வர்மா

அரையிறுதிப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை என்று ஷஃபாலி வர்மா கூறியுள்ளார்.
படம் | X
படம் | X
Published on
Updated on
1 min read

மகளிர் ஆசியக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் மிக முக்கியமானவை என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா கூறியுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்தியா அணி, பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக 78 ரன்கள் வித்தியாசத்திலும், நேபாளத்தை 82 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா கூறுகையில், “நாங்கள் அனைவரும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி போட்டிகளை வெல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அரையிறுதிப் போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இன்று, நாங்கள் அனைவரும் பயிற்சிக்கு வந்துள்ளோம், நாளை நல்லது செய்ய எங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று நம்புகிறோம்.

நாங்கள் ஒரு சிறந்த பேட்டிங் குழுவாக உள்ளோம். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால், நாளுக்கு நாள், நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், லோயர் ஆர்டர் பேட்டர்களும் வலைகளில் பயிற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களும் சிக்ஸர் அடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நாங்கள் பீல்டிங்கிலும் கடுமையாக உழைத்து வருகிறோம். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய அனைத்து விஷயங்களையும் சரியாக செய்து, அரையிறுதியில் போட்டியில் பங்களிப்போம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com