கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த மம்தாவின் பயணம் ஒத்திவைப்பு!

மத்திய பட்ஜெட்டில் பாகுபாடு இருப்பதாகக் கூறி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூலை 2024, 12:51 pm

DIN

நீதி ஆயோக் கூட்டத்திற்காக தில்லி செல்லவிருந்த மம்தா பானர்ஜியின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 23ஆம் தேதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் உள்ளிட்டோர், நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

அதாவது, வருகிற ஜுலை 27ஆம் தேதியில் நடைபெறவிருக்கும் நீதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நீதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, இன்று (ஜூலை 25) விமானத்தில் புறப்படவிருந்தார். ஆனால், முதல்வர் மம்தா பானர்ஜியின் இன்றைய தில்லி பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மம்தா நாளை (ஜூலை 26) தில்லி செல்வாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ``அதுகுறித்த தகவல்கள் நாளையே தெரியவரும்” என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கவிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.