இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

விடைபெறும் டீசல் வாகனங்கள்!

நாட்டின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு, போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றங்கள் அவசியம் என நீதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

நாட்டின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு, போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றங்கள் அவசியம் என நீதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, அதற்கு மாற்றாக சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது 76 சதவீதமாக உள்ள பெட்ரோல் பயன்பாடு, 2070-இல் 29 சதவீதமாகக் குறையும். மின்சாரப் பயன்பாடு 45 சதவீதமாகவும், உயிரி எரிபொருளின் பயன்பாடு 20 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் பயன்பாடு 90 சதவீதம் வரை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை அடைய, வாகனத் திறனுக்கான ‘கஃபே’ தரநிலைகளை கடுமையாக்குதல் மற்றும் பழைய வணிக வாகனங்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ளது. மேலும், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை மேலும் நவீனப்படுத்தி மேம்படுத்தவும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.