
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியுள்ளார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த். இது இந்திய ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி என்றும், நாட்டிற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று சேவைகளின் வயதைக் குறைக்கும் நோக்கத்துடன், குறுகிய கால பணியாளர்களைச் சேர்ப்பதற்காக 2022ஆம் ஆண்டில் மத்திய அரசால்அன்கிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து தனது எக்ஸ் பதிவில் முதல்வர் சாவந்த் வெளியிட்ட தகவலில்,
அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் ஒரு வழியாகும். மேலும் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும்.
அக்னிபத் திட்டம் ராணுவம் மேற்கொண்ட தேவையான சீர்திருத்தங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை கூறினார்.
மேலும் ஆயுதப்படைகளில் சராசரி வயதினரை இளமையாக வைத்திருக்கும் நோக்கில் ஆள்சேர்ப்பு செயல்முறையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.