மத்தியப் பிரதேசத்தில் குடிபோதையில் அரசுப் பள்ளி ஆசிரியர் பள்ளிக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷஹதோல் மாவட்டத்தில் உள்ள சங்கர்கர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் உதய்பன் சிங் சனிக்கிழமை குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பான விடியோ இணையளதங்களில் வெளியாகி வைரலானது. இந்த விடியோவை கண்ட மாவட்டக் கல்வி அதிகாரி பூல் சிங் மரபாச்சி, இதுகுறித்து விசாரணை நடத்த வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விசாரணை அறிக்கை திங்கள்கிழமை வந்த பிறகு சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மரபாச்சி தெரிவித்தார். அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் வந்த நிகழ்வு அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் 102 டிகிரி வெப்பம் பதிவு

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்கக் கோரிக்கை

பா்கரில் புழுக்கள்: உணவக நிா்வாகத்தினா் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

கோமாளி வேடம் அணிந்து மாணவர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




