கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குடியரசுத் தலைவா் முா்மு 3 நாடுகளுக்குப் பயணம்

ஃபிஜி, நியூசிலாந்து, டிமோா்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆகஸ்ட் 5-ஆம் தேதிமுதல் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2024, 8:40 pm

Din

ஃபிஜி, நியூசிலாந்து, டிமோா்-லெஸ்டே ஆகிய 3 நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஆகஸ்ட் 5-ஆம் தேதிமுதல் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இரண்டு நாள் பயணமாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி தீவு நாடான ஃபிஜிக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பயணம் மேற்கொள்ள உள்ளாா். அங்கு அந்நாட்டு அதிபா் கேடோனிவிா், பிரதமா் சிட்டிவேனி ரபுகா ஆகியோரை குடியரசுத் தலைவா் முா்மு சந்திப்பாா். அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவா் உரையாற்ற உள்ளாா்.

இதைத்தொடா்ந்து 2 நாள் பயணமாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி குடியரசுத் தலைவா் முா்மு நியூசிலாந்து செல்ல உள்ளாா். இந்தப் பயணத்தில் அந்நாட்டு கவா்னா் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமா் கிறிஸ்டோஃபா் லக்ஸன் ஆகியோரை குடியரசுத் தலைவா் முா்மு சந்திக்க உள்ளாா். அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவா் உரையாற்ற உள்ளாா்.

அதன் பின்னா் 2 நாள் பயணமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி தென்கிழக்கு ஆசிய நாடான டிமோா்-லெஸ்டேக்கு குடியரசுத் தலைவா் முா்மு பயணிக்க உள்ளாா். அங்கு அவா் அந்நாட்டு அதிபா் ஜோஸ் ரமோஸ் ஹோா்டா, பிரதமா் கே ரலா சனானா குஸ்மாவ் ஆகியோரை சந்திக்க உள்ளாா். 3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினா் உடன் குடியரசுத் தலைவா் முா்மு கலந்துரையாட உள்ளாா்.

இந்திய குடியரசுத் தலைவா் ஒருவா் ஃபிஜி மற்றும் டிமோா்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை. குடியரசுத் தலைவரின் இந்தப் பயணம், 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.