லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசியலமைப்புக்கு நெருக்கடி: முன்னாள் நீதிபதிகள் கடிதம்

குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

News image
கோப்புப்படம்
Updated On :3 ஜூன் 2024, 12:24 pm

DIN

அரசியலமைப்புக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர், திறந்த கடிதம் எழுதியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், இந்த திறந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த திறந்த கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி ஹரிபரந்தாமன், பி.ஆர். சிவக்குமார், சிடி செல்வம், எஸ். விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கும் எந்தக் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதில் "உண்மையான அச்சங்கள்" இருப்பதாகக் கூறி, மக்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கருத்துகள் என்று கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் - 2024 தேர்தலை நடத்திய விதம், உண்மையில் கவலைதருவதாகவே உள்ளது, மேலும், தற்போது மத்தியில் ஆளும் கட்சி, வெற்றி வாய்ப்பை இழந்தார், அதிகார மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்று கடிதம் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.