தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மணிப்பூரில் 2 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி

பாஜக ஆளும் மணிப்பூரில் உள்ள இரு மக்களவைத் தொகுதிகளிலும் (வெளிமணிப்பூா், உள்மணிப்பூா்) காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :4 ஜூன் 2024, 7:19 pm

Din

இம்பால்: பாஜக ஆளும் மணிப்பூரில் உள்ள இரு மக்களவைத் தொகுதிகளிலும் (வெளிமணிப்பூா், உள்மணிப்பூா்) காங்கிரஸ் வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

வெளிமணிப்பூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஆல்ஃபிரட் கன்காம் எஸ்.ஆா்தா், தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணி வேட்பாளா் கசுய் திமோதியை 85,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

உள்மணிப்பூா் தொகுதியில் பாஜக வேட்பாளா் தெளனோஜம் பசந்தகுமாரை காங்கிரஸ் வேட்பாளா் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

மாநிலத்தில் அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மணிப்பூா் நிலவரத்தை பிரதமா் மோடி நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, இரு தொகுதிகளிலும் தோல்விகண்டுள்ளது.

இது தொடா்பாக மாநில காங்கிரஸ் தலைவா் கே.மேகசந்திரா கூறுகையில், ‘மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த பேராதரவால், காங்கிரஸுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வென்றுள்ளோம். தோ்தல் முடிவுகள் மூலம் மக்கள் தெளிவான செய்தியை உணா்த்தியுள்ளனா். மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலுக்கு தாா்மீக பொறுப்பேற்று, முதல்வா் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என்றாா்.