தோல்வி இறுதியானது அல்ல: அஜித் பவார்


மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து கட்சி சுயபரிசோதனை செய்யும் என்று மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் என்சிபி மற்றும் மஹாயுதி கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்ட 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அஜித் பவார் தனது எக்ஸ் தளப் பதிவில், நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்துவிட்டது.
பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். தோல்வி இறுதியானது அல்ல. கட்சித் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சுயபரிசோதனை செய்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருவோம். ராய்காட் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக சுனில் தட்கரேவுக்கு வாழ்த்துகள்.
அருணாச்சலப் பிரதேசத்தில் என்சிபி மூன்று பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...