குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில்

News image
Updated On :7 ஜூன் 2024, 6:16 pm IST

ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே நிலக்கரி கொண்டு சென்ற சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

ஆக்ராவில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தில்லியை நோக்கி சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தடம் புரண்ட ரயிலின் 2 பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து ஏற்றப்பட்ட நிலக்கரியை அகற்றுவதற்காக ஜேசிபி ஒன்றும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் மதியம் வரை எந்த ரயில் சேவையும் இயக்கப்படவில்லை.

இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முன்னதாக, மே 28ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள பால்கர் யார்டில் சரக்கு ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.