பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக அரவிந்த் சிங் பதவியேற்பு!
பிகார் ஆளுநர் ராஜேந்தி விஸ்வநாத் அர்லேகர் நீதிபதி சண்டேலுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.


பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக அரவிந்த் சிங் சண்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிகார் ஆளுநர் ராஜேந்தி விஸ்வநாத் அர்லேகர் நீதிபதி சண்டேலுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் மே 29 அன்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி சண்டேல் மாற்றப்பட்டார்.
1963இல் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பிறந்த நீதிபதி சண்டேல் ராய்பூரில் உள்ள ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டமும், பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டமும் பெற்றார்.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தின்படி, ஆகஸ்ட் 26,1987ல் மத்தியப் பிதேசத்தில் உள்ள ஷாதோலில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இரண்டாம் வகுப்பு சிவில் நீதிபதியாகச் சேர்ந்தார். அதன்பிறகு, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகளில் துணை நீதித்துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...