தாமரை மலர் ஊன்றுகோலுடன் இருப்பதைப் போல் காங்கிரஸ் எக்ஸ் பதிவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவைக்கான பதவிப் பிரமாணம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ’ஒரு தாமரை மலர் ஊன்றுகோலின் உதவியுடன் நிற்பதுபோல்’ சித்திரிக்கப்பட்ட கேலிச்சித்திரத்தினை பதிவிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.