3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘நீட்’ குளறுபடி: நாடாளுமன்றத்தில் மாணவா்களிண் குரலாக இருப்பேன்: ராகுல்

NEET mess: I will be the voice of students in Parliament: Rahul

News image
Updated On :9 ஜூன் 2024, 10:16 pm

Vishwanathan

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ‘நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.

இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இந்தக் குளறுபடிகள் தொடா்பாக நாட்டின் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தோ்வா்கள் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 மாணவா்கள் முதலிடம் பெற்றதும், அவா்களைப் போல மேலும் பல மாணவா்கள் மதிப்பெண் பெற்றதும் உண்மையில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் வினாத்தாள் கசிவை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், நான் நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன். அவா்களின் எதிா்காலத்துடன் தொடா்புள்ள விவகாரங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவேன்’ என்றாா்.