ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணும் ஆளுநரை சந்தித்தார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றது.
மொத்தம் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபுவின் பெயரை பவன் கல்யாண் முன்மொழிந்தார்.
இதனை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்ட நிலையில், விஜயவாடாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

இந்தியாவின் எண்மப் புரட்சியில் மோடி, சந்திரபாபு நாயுடு முக்கியப் பங்கு - பில் கேட்ஸ் பாராட்டு

திருப்பதி லட்டு சா்ச்சை: ஒரு நபா் குழு அமைக்க முடிவு - ஆந்திர முதல்வா் தகவல்

24 மணி நேரத்தில் 4,000 ‘இ-சைக்கிள்’ விநியோகம்: கின்னஸ் சாதனை படைத்த ஆந்திர முதல்வா்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

