ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு!

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு தேர்வு.

News image
- DOTCOM
Updated On :11 ஜூன் 2024, 7:25 am

DIN

ஆந்திரப் பிரதேச ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு உரிமை கோரினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஜனசேனை கட்சித் தலைவர் பவன் கல்யாணும் ஆளுநரை சந்தித்தார்.

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பெரும் வெற்றி பெற்றது.

மொத்தம் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் மட்டும் 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திர முதல்வராக சந்திரபாபுவின் பெயரை பவன் கல்யாண் முன்மொழிந்தார்.

இதனை அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றுக் கொண்ட நிலையில், விஜயவாடாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் அவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சந்திரபாபு நாயுடு.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.