
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புல்டோசர் ஓட்டுநரிடம் கட்டணம் கேட்டதால் சுங்கச் சாவடியை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
தில்லி - லக்னெள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹாபூர் சுங்கச் சாவடி வழியாக செவ்வாய்க்கிழமை காலை புல்டோசர் வாகனம் வந்துள்ளது.
சுங்கச் சாவடியை கடக்க கட்டணம் கேட்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், புல்டோசரை கொண்டு சுங்கச் சாவடியை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் செல்லும் இரண்டு வழித்தடங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி புல்டோசர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இதே ஹாபூர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் அதிவேகமாக காரை இயக்கியதில், சுங்கச் சாவடியின் ஊழியர் படுகாயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.