தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

ஹைதராபாத்-அயோத்தி நேரடி விமான சேவையை நிறுத்திய ஸ்பைஸ்ஜெட்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஹைதராபாத்-அயோத்தி இடையேயான நேரடி விமான சேவையை நிறுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஜூன் 2024, 1:18 am IST

ஹைதராபாத்-அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடங்கிய இரு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த விமான சேவையை நிறுத்த முடிவெடுத்ததாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டதையடுத்து அங்கு பக்தா்களின் வருகையும் அதிகரித்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.

முன்னதாக, கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். ஜனவரி 21-ஆம் தேதி அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் தலைநகா் தில்லியில் இருந்து அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது.

மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்பூா், பெங்களூரு, பாட்னா, தா்பங்கா நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை அந்நிறுவனம் பிப்ரவரியில் தொடங்கியது. இரு மாதங்களுக்கு ஹைதராபாதில் இருந்து தொடங்கப்பட்ட அயோத்தி விமான சேவை மட்டும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.