எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

News image
Updated On :15 ஜூன் 2024, 1:43 am IST

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை (ஜூன் 15) பிறக்கும் ஆனி மாதம் முதல் தேதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஐயப்பன் கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டியதை தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூன் 19- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் .

தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.