தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

Published On :

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை (ஜூன் 15) பிறக்கும் ஆனி மாதம் முதல் தேதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஐயப்பன் கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டியதை தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூன் 19- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் .

தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.