காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

ஆனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

News image
Updated On :15 ஜூன் 2024, 1:43 am IST

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட து.

சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ஆம் தேதி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை (ஜூன் 15) பிறக்கும் ஆனி மாதம் முதல் தேதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ஐயப்பன் கோயில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டியதை தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். ஜூன் 19- ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் .

தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.