கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசா: தற்காலிக அவைத் தலைவராக ரணேந்திர பிரதாப் பதவியேற்பு!

ஒடிசாவில் தற்காலிக அவைத் தலைவராக ரணேந்திர பிரதாப் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

News image

ரணேந்திர பிரதாப் ஸ்வைன்

Updated On :14 ஜூன் 2024, 9:52 am

ஒடிசாவில் எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த ரணேந்திர பிரதாப் ஸ்வைன் தற்காலிக அவைத்தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரகுபர் தாஸ் தற்காலிக அவைத் தலைவராக ரணேந்திர பிரதாப்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ரணேந்திர பிரதாப் பதவியேற்பு விழாவில் அந்த மாநில மோகன் மாஜீயும் கலந்துகொண்டார்.

முதல்வரின் பரிந்துரையின் பேரில் நான் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்றார்.

கட்டாக் மாவட்டத்தில் உள்ள அதாகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான ரணேந்திர பிரதாப், ஒடிசா பேரவையின் அவைத்தலைவருக்கான தேர்தலை ஜூன் 20ல் நடத்துகிறார்.

மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஜூன் 18, 19ல் தற்காலிக அவைத்தலைவரால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகின்றனர்.

ஒடிசா பேரவையில் அடுத்த அவைத்தலைவராக பாஜகவின் மூத்த தலைவர் சுரமபாதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.