திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

’இந்தியாவின் தாய்’ இந்திராகாந்தி: பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி

இந்திராகாந்தியை ‘இந்தியாவின் தாய்’ என்று குறிப்பிட்டு பேசியுள்ளார் மத்திய இணைஅமைச்சர் சுரேஷ் கோபி

News image

கோப்புப் படம் - dot com

Updated On :15 ஜூன் 2024, 12:13 pm IST

கேரளத்தின் திருச்சூரில், கடந்த புதன்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற ஒரு செய்தியாளர் பேட்டியில் மத்திய இணைஅமைச்சர் சுரேஷ் கோபி இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்று கூறி புகழ்ந்துள்ளார்.

புங்குன்னத்தில் அமைந்துள்ள கருணாகரன் நினைவுச்சின்னமான முரளி மந்திரத்தினைப் பார்வையிட்ட சுரேஷ் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் கோபி, இந்திராகாந்தியை ’இந்தியாவின் தாய்’ என்றும், மறைந்த காங்கிரஸ் முதல்வர் கே. கருணாகரன் மற்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஈ.கே. நாயனார் இருவரையும் தனது ’அரசியல் குருக்கள்’ என்றும் விவரித்தார். மேலும், கருணாகரன் நினைவிடத்திற்கு வருகை தருவதில் எந்த அரசியல் கருத்தையும் சேர்க்க வேண்டாம்; தனது குருவுக்கு மரியாதை செலுத்த வந்ததாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கருணாகரனை கேரளாவில் ’காங்கிரஸின் தந்தை’ என்று வர்ணிப்பது, மற்ற கட்சித்தலைவர்களை அவமதிப்பதற்காக அல்ல என்றும் விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.