ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முன்னாள் காதலனைக் கொன்ற காதலி கைது!

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் காதலனைக் கொன்ற காதலி கைது செய்யப்பட்டுள்ளார்

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூன் 2024, 8:22 am

DIN

பிரஜ்வீர் என்பவர் தனது காதலி, வேறொருவருடன் தொடர்பிலிருப்பதைக் கண்டித்ததால், பிரஜ்வீரை கொலை செய்த காதலி கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 40 வயதான பிரஜ்வீர் என்பவருடன், 38 வயதான கவிதா சாஹர் (முன்னரே வேறொருவருடன் திருமணமானவர்) 2007 முதல் 10 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், கவிதா ஆக்ரா சென்றுள்ளார்; அங்கு சுரேந்திர சாஹர் என்பவருடனும் நட்பு கொண்டு, லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதனையறிந்த பிரஜ்வீர், கவிதாவிடம் சுரேந்திர சாஹருடனான உறவினை முறித்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும், கவிதா பிரஜ்வீரின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியுள்ளார்.

இதனால் கோபமுற்ற பிரஜ்வீர், 2019ஆம் ஆண்டில் சுரேந்திர சாஹர் நடத்தி வந்த ஆடைக் கடைக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து, ஆடைக் கடை மீது பிரஜ்வீர் தீ வைத்ததாகக் கூறி, கவிதா காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து, பிரஜ்வீர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் பிரஜ்வீர், கவிதாவை எச்சரித்தும், அவரது தற்போதைய காதலன் சுரேந்திராவுடன் வாழ்வதைத் தடுத்தும் உள்ளார்.

பிரஜ்வரீன் இந்த துன்புறுத்தலால், பிரஜ்வீரை கவிதா கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதாவது, ஜூன் 15ஆம் தேதியில் பிரஜ்வீரைச் சந்தித்து, கவிதா மற்றும் அவரது நண்பர்கள் அதுல், ரோஹித், சோனு ஆகியோர் பிரஜ்வீரை ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் பீர் பாட்டிலைக் கொண்டும் தாக்கியதில் பிரஜ்வீர் உயிரிழந்துள்ளார். பின்னர், பிரஜ்வீரின் உடலை ரோட்டா கால்வாய் அருகே வீசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆக்ராவின் மால்புரா பகுதியில் ஜூன் 15ஆம் தேதியில் பிரஜ்வீரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கவிதாவுடனான உறவு காரணமாக பிரஜ்வீரை நிராகரித்த அவரது குடும்பத்தினர், அவருடன் இனி எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, பிரஜ்வீரின் உடலை வாங்க மறுத்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கவிதா தான் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, கவிதாவும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.