மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு: ராஜஸ்தானில் 10 இடங்களில் சிபிஐ சோதனை!

சோதனையில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல்

News image
CBI
Updated On :22 ஜூன் 2024, 9:18 am

DIN

ராஜஸ்தானில் சட்டவிரோதமான மணல் அள்ளுவது தொடர்பாக 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், டோங்க், ஜோத்பூர், நாகவூர், பில்வாரா, கரோலி மற்றும் சிகார் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் பெஞ்ச் உத்தரவின்பேரில், பண்டி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மணல் வழக்கின் விசாரணை சிபிஐ ஏற்றுக்கொண்டது.

கடந்தாண்டு அக்டோபரில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட வாகனத்தில் 40 மெட்ரிக் மணல் கொண்டுசெல்லும்போது, ஷாரூக் என்பவர் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கைது செய்யப்பட்டதாக எஃப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.