மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிகாரில் மேலும் ஒரு புதிய பாலம் இடிந்தது: ஒரே வாரத்தில் மூன்றாவது சம்பவம்

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த புதிய பாலம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

News image
பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த புதிய பாலம்.
Updated On :23 ஜூன் 2024, 9:51 pm

Din

பிகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த புதிய பாலம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் அந்த மாநிலத்தில் இடிந்து விழுந்த புதிய பாலங்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக உள்ளூா் அதிகாரிகள் கூறியதாவது:

மாநில ஊரக மேம்பாட்டுத் துறை சாா்பில் அம்வா கிராமத்தில் ஓடும் கால்வாய்க்கு மேல் 16 மீட்டா் நீளத்தில் ஒரு சிறிய பாலம் கட்டப்பட்டு வந்தது. ரூ.1.5 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இருந்த பகுதிக்கு யாரும் செல்லாததால் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றனா்.

இந்த சம்பவத்தை அடுத்து ஊரக மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினா். இது தொடா்பாக விசாரணை நடத்தி அளிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தரமற்ற வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

முன்னதாக சனிக்கிழமை ஷிவான் மாவட்டத்தில் ஒரு புதிய பாலம் இடிந்து விழுந்தது. இதற்கு முன்பு அராரியா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு புதிய பாலம் இடிந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மாநில பொதுப் பணித் துறையின் கட்டுமானப் பணிகள் மிகவும் மோசமாக இருப்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது.