தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கன்னட நடிகர் தர்ஷன் வழக்கு: முக்கிய குற்றவாளிகளை சிறை மாற்ற உத்தரவு!

ரசிகர் ரேணுகாசுவாமி கொலை வழக்கு: நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

News image

பெங்களூரில் தர்ஷனை காண திரண்டிருந்த ரசிகர்கள் - கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2024, 10:58 pm IST

சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்ட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகாசுவாமியை, நடிகர் தர்ஷன் தூகுதீபா, அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கௌடா உள்ளிட்டோர் கடத்திக் கொலை செய்த வழக்கில் நடிகா் தா்ஷன் தூகுதீபாவை ஜூன் 11-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்ஷனின் மனைவி விஜயலக்ஷ்மிக்கும் அவருக்குமிடையே நடிகை பவித்ரா கௌடா பிரிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார் ரேணுகாசுவாமி. மேலும், நடிகையை குறித்து அநாகரிகமான வார்த்தைகளைப் பதிவிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Story image

இந்த நிலையில், பெங்களூரின் சுமனஹள்ளி பகுதியில் கால்வாய் ஒன்றின் அருகே ரேணுகாசுவாமியின் சடலம் சிதைந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதியன்று கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள், கடந்த 10-ஆம் தேதி, நடிகர் தர்ஷனுக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் ரசிகர் மன்றங்களைச் சார்ந்த கார்த்திக், நிகில் நாயக், கேஷவமூர்த்தி, ரவீசங்கர் ஆகிய நால்வர் ரேணுகாசுவாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையில் நடிகர் தர்ஷன் தூகுதீபாவும், அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான ப்வித்ரா கௌடாவும் முக்கியக் குற்றவாளிகள் என்ற தகவல் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 11 பேரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜூலை 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

படம் | ஏஎன்ஐ

இந்த நிலையில், ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், நிகில் நாயக், கேஷவமூர்த்தி, ரவிசங்கர் ஆகிய நால்வரையும் துமக்குரு சிறைக்கு மாற்ற நீதிமன்றம் இன்று(ஜூன் 24) உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.