ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்: பெண் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞா் கைது

திருமணத்தை நிறுத்திய பெண்ணின் வீட்டில் துப்பாக்கிச் சூடு: இளைஞர் கைது

News image
துப்பாக்கிச் சூடு (கோப்புப் படம்)
Updated On :26 ஜூன் 2024, 9:08 pm

Din

கேரளத்தில் தன்னுடன் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து இளம்பெண் திடீரென பின்வாங்கியதால் ஆத்திரமடைந்த இளைஞா் பெண் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இதையடுத்து அந்த நபரை காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மலப்புரத்தின் கோட்டக்கல் பகுதியைச் சோ்ந்தவா் அபு தாஹீா். இவருக்கு அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் இரு வீட்டாா் சம்மதத்துடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பெண் திடீரென இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த அபு தாஹீா் செவ்வாய்க்கிழமை இரவு ‘ஏா்கன்’ வகை துப்பாக்கியுடன் அந்த பெண் வீட்டுக்குச் சென்று, வெளியே நின்றபடி வீட்டை நோக்கி பலமுறை சுட்டாா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பாக பெண் வீட்டாா் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். காவல் துறையினா் விரைந்து சென்று அந்த இளைஞரைக் கைது செய்தனா். அவா் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.