முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடியரசுத் தலைவர் உரை ஒளிபரப்பில் மோடி 73 முறை, ராகுல் 6 முறை காட்டப்பட்டனர்! ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்

குடியரசுத் தலைவர் உரையின்போது சன்சத் தொலைக்காட்சியில் மோடி 73 முறை, ராகுல் 6 முறை காட்டப்பட்டனர்!

News image
ராகுல் - மோடி
Updated On :27 ஜூன் 2024, 12:33 pm

DIN

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில், இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையின் நேரடி ஒளிபரப்பின்போது பிரதமர் மோடி 73 முறையும் ராகுல் 6 முறை மட்டுமே காட்டப்பட்டனர் என்று ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

18வது மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கியிருப்பதை முன்னிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது குறித்து தெரிவித்திருப்பதாவது, குடியரசுத் தலைவரின் 51 நிமிட உரையின்போது, யார் யார்? எத்தனை முறை காண்பிக்கப்பட்டனர்?

- அவையின் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி - 73 முறை

- அவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - 6 முறை

- அரசு : 109 முறை

- எதிர்க்கட்சிகள் : 19 முறை

மக்களவை தொலைக்காட்சி, நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளைத்தான் ஒளிபரப்பத்தானே தவிர, கேமராஜீவி தனது விருப்பத்தை ஒளிபரப்ப அல்ல என்று ஜெய்ராம் ரமேஷ் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

18வது மக்களவையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், கடந்த 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனம் குறித்து பாஜகவின் நிலைப்பாடும் இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட்டபோது, உலக நாடுகள் பலரும், இந்தியா வீழும் என்றே நம்பினார்கள். இந்திய அரசமைப்பு கொண்டு வரப்பட் பிறகும், அதன் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

இன்று ஜூன் 27ஆம் தேதி, 1975ஆம் ஆண்டு ஜூன் 25ல், நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது அரசமைப்பு மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல், மிகப்பெரிய கருப்பு நாள். ஒட்டுமொத்த நாடும் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஆனால், சட்டத்துக்கு எதிரான சக்திகளிடமிருந்து மீண்டு தேசம் வெற்றிபெற்றது என்று கூறினார் முர்மு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.