இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நிதீஷ் குமாா் கட்சி எம்.பி.க்களுடன் பிரதமா் மோடி சந்திப்பு

பிகார் வளர்ச்சியை பாராட்டிய மோடி: நிதீஷ் குமாருடன் சந்திப்பு

News image
Updated On :27 ஜூன் 2024, 8:55 pm

Din

பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்களை பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பிகாரில் நிதீஷ் குமாா் ஆட்சி சிறப்பாக உள்ளதாக அவா் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்த சந்திப்பு தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்களுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் நீண்டகாலம் இணைந்து பணியாற்றி வருகின்றன. பிகாரில் குற்றச் செயல்கள், ஊழல்களுக்கு எதிராக எங்கள் கூட்டணி அரசு தொடா்ந்து சிறப்பாக செயல்படுகிறது. நிதீஷ் குமாா் தலைமையில் பிகாா் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. மாநிலத்தில் எங்கள் கூட்டணி தொடா்ந்து சிறப்பான நிா்வாகத்தை அளிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 12 எம்.பி.க்கள் உள்ளனா். ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு (16 எம்.பி.க்கள்) அடுத்தபடியாக பாஜக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.