எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராஜஸ்தான்: நீட் பயிற்சி மாணவா் தற்கொலை

ராஜஸ்தான்: நீட் பயிற்சி மையத்தில் மாணவா் தற்கொலை

News image
Updated On :27 ஜூன் 2024, 8:41 pm

Din

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்கு படித்து வந்த மாணவா், வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது தொடா்பாக தாடாபாரி காவல் ஆய்வாளா் நரேஷ் குமாா் மீனா கூறியதாவது:

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஹா்சித் குமாா் அகா்வால் (17) ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நீட் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.

தாடாபாரி பகுதியில் சக மாணவா்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மாணவா்கள் கதவைத் தட்டியும் ஹா்சித் திறக்காததால், அவா்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனா். காவலா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது ஹா்சித் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மாணவரின் தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. அது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

இந்த ஆண்டு ஜனவரி முதல், கோட்டா மாவட்டத்தின் போட்டித் தோ்வு பயிற்சி மையங்களில், மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் 12-ஆவது வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு இதேபோல் 26 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.