மது வாங்கிவந்து வீட்டில் குடிக்குமாறு கணவருக்கு அறிவுறுத்துங்கள்: ம.பி. அமைச்சர்
மது வாங்கிவந்து வீட்டில் குடிக்குமாறு கணவருக்கு அறிவுறுத்துங்கள் என ம.பி. அமைச்சர் பேச்சு பேசுபொருளாகியிருக்கிறது.


புது தில்லி: பெண்கள், அவர்களது கணவர்களிடம் மது வாங்கி வந்து வீட்டில் குடிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹாவின் பேச்சு விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது.
மத்தியப் பிரதேச அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியிருந்தாலும், அவர் சொல்ல வந்தது என்னவோ நேர்மறையான கருத்தாகவே அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, மதுவை வாங்கி வந்து வீட்டில் குடிக்கச் சொல்வதன் மூலம், அவர்கள் வெட்கமடைவார்கள் என்றும், வீட்டில்தான் குடிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு அது தயக்கத்தை ஏற்படுத்தி நாளடைவில் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
வெளியில் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களிடம், வீட்டில் இருக்கும் மனைவி, இனி, மதுவை வாங்கி வந்து வீட்டில்தான் குடிக்க வேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிடுங்கள். வீட்டில் பெண்கள், குழந்தைகள் முன்னிலையில் அவர்களால் குடிக்க முடியாது, அவமானமாக இருக்கும், அவர்கள் நாளடைவில் குடிப்பதை நிறுத்திவிடுவார்கள் என்கிறார் நாராயண் சிங்.
இவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும், குடித்துவிட்டு வரும் ஆண்களுக்கு வீட்டில் உணவளிக்காதீர்கள் என்றும் பெண்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்கள் பொதுவாக அவ்வாறு செய்வதில்லை. கேட்டால் சமூக மதிப்பு என்று காரணம் சொல்கிறார்கள். தவறை நிறுத்த இவ்வாறு செய்யலாம் என்றும், மாநிலத்தில் மதுவுக்குத் தடை விதிக்க முடியாதா என்ற கேள்விக்கு, தடை விதிக்கப்பட்ட மாநிலங்களில் கூட மது கிடைக்கிறதே என்று பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...