தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தவிா்த்திருக்கலாம்: ஹரியாணா முன்னாள் முதல்வா்

எம்எஸ்பிக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள் என்று ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்தா் சிங் ஹூடா தெரிவித்துள்ளாா்.

News image

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா (கோப்புப்படம்)

Updated On :4 மார்ச் 2024, 2:30 am IST

2021-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள் என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா தெரிவித்துள்ளாா். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது), கிசான் மஸ்தூா் மோா்ச்சா விவசாய கூட்டமைப்புகள் சாா்பாக ‘தில்லி செல்வோம்’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஹரியாணா முன்னாள் முதல்வரும், அந்த மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பூபேந்தா் சிங் ஹூடா கூறியுள்ளதாவது: கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அப்போது அந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவான விலையில் விளைபொருள்களைக் கொள்முதல் செய்வது குற்றம் என்ற 4-ஆவது சட்டத்தையும் இயற்றுமாறு கூறினேன். மூன்று வேளாண் சட்டங்களுடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தையும் இயற்றியிருந்தால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கமாட்டாா்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையில் 14 பயிா்களைக் கொள்முதல் செய்வதாக ஹரியாணா அரசு கூறும் நிலையில், அதற்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிப்பதில் எங்கு சிக்கல் நிலவுகிறது என்று கேள்வி எழுப்பினாா்.